Saturday, August 4, 2007

கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்க எளிய சோதனைமுறை

தினமலர்(சென்னைப் பதிப்பு நாள் ஆகஸ்டு 4)
பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகண்டுபிடிக்க எளிய சோதனைமுறை அறிமுகம்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளைச் சேர்ந்த 85 சதவிகித பெண்கள் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கண்ணால் பார்த்தே நோயைக் கண்டறியும் ஒரு எளிய பரிசோதனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இந்தவகைப் புற்றுநோய் பெரும்பங்கு வகிக்கிறது.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில்உள்ள 85 சதவிகித பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட நான்கு லட்சத்து 93ஆயிரம் பேரில் இரண்டு லட்சத்து 73ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
கர்ப்பப் பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு 'எச்பிவி-ஹூயூமன் பபிலோமா'என்ற வைரஸ் தான் காரணம்.இந்த வைரஸ் பரவாமல் தடுக்க புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் பாமர மக்களைச் சென்றடையப் பல ஆண்டுகளாகும்.தற்போது 'பாப் ஸ்மியர்' பரிசோதனை முறை பயன்பாட்டில் உள்ளது.இருப்பினும் சாதாரண மக்களுக்கு 'பாப் ஸ்மியர்' பரிசோதனை முறையிலான சோதனை செய்வது சிரமம் என தலைமை ஆய்வாளர் டாக்டர் ரங்கசாமி சங்கரநாராயணன் கூறியுள்ளார்.இதனால் எளிய பரிசோதனை செய்யும் ஒரு சுலபமான முறையை இவர் ஆய்வு செய்தார்.
இந்த முறையில் நான்கு சதவிகித அசிடிக் அமிலத்தை கர்ப்பப்பை வாயில் தடவிப் பார்க்கும் போது "அசெட்டோ ஒயிட்"வெள்ளை நிறமாகத்தோன்றினால் அது புற்று நோயின் முந்திய நிலையின் அடையாளமாகும்.
இம்முறை குறித்து டாக்டர் பாயில் கூறுகையில்"சங்கர நாராயணனின் இந்த ஆய்வு பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.இது புற்றுநோயைத் தடுப்பதில் தரமான மற்றும் குறைந்ததொழில் நுட்பங்களுடன் கூடிய சிறந்த முறையாகும்.இது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் கடந்த2000ம் ஆண்டிலிருந்து பரிசோதனை செய்யப்படுகிறது."என்று தெரிவித்தார்.
கிறிஸ்தவ சமூக சுகாதார இணையத்தின் இயக்குனர் டாக்டர் ஜேக்கப் செரியன் கூறுகையில்'மற்ற முறைகளுடன் ஒப்பிடும்போது,நோயைக் கண்டுபிடிப்பதிலும் உடனே சிகிச்சைக்கு வழி வகுப்பதிலும் இம்முறை சிறந்த முறையாகும்.செவிலியரில்துவங்கி மருத்துவுத் துறையில் உள்ள அனைவரும் இந்த முறையைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும்'என்றார்.
மருத்துவத் துறையினருக்குத் தரமான பயிற்சி அளிப்பது,தரமான பரிசோதனையை அனைத்து இடங்களிலும் மேற்கொள்வதுஆகியவை மூலமாக மட்டுமே இந்தமுறை அனைவருக்கும் சென்றடைந்து பயன்பெற வழி வகுக்கும்'என்று டாக்டர்சங்கரநாராயணன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

2 comments:

வடுவூர் குமார் said...

இங்கு சிங்கையில் குறைந்த விலையில் எல்லா மாதர்களையும் செய்துகொள்ள தூண்டுகிறார்கள்.

அனுராதா said...

ஓ!அப்படியா!!தகவலுக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே.