Tuesday, August 28, 2007

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

சென்ற வெள்ளிக்கிழமை மாலை சுமார் ஐந்தரை மணியளவு இருக்கும்.
சரியான மழை பெய்துகொண்டிருந்தது.ஒரு இடி இடித்தது பாருங்கள்.
எங்களின் லேப் டாப் அவுட்!டி.வி அவுட்.
டி.வி.யை ரிப்பேர் பார்த்து விட்டோம்.லேப் டாப் மெயின் சர்க்யூட்
போய் விட்டதாம்!தெரிந்த மென் பொருள்,வன்பொருள்
பொறியாளர்களிடம் காண்பித்தோம். ரூ.8000/-கும் மேல் ஆகுமாம்.
சிங்கப்பூரில் இருக்கும் எங்கள் மகனிடம் விபரம் தெரிவித்து விட்டோம்.
புதிதாக ஒரு லேப்டாப் வாங்கித் தருவதாகச் சொன்னான்.இம்மாதம்
15 ந்தேதி வாக்கில் சிங்கப்பூர் செல்லவிருக்கிறோம். அங்கிருந்து மீண்டும் பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவேன்.
எனவே அதுவரை தற்காலிகமான இடைவேளை.

வடுவூர் குமாருக்கு இவ்வளவு சீக்கிரம் சஸ்பென்ஸை உடைப்பேன்
என்று நினைக்கவில்லை.எனது மெயில் ஐடிக்கு முடிந்தால்,
விருப்பமிருந்தால் உங்களின்
தொலைபேசி எண்ணை அறியத் தாருங்கள்.சிங்கை வந்தபின் தங்களைச் சந்திக்கிறேன்.

3 comments:

வவ்வால் said...

ஆஹா ,
பெரிய இடைவெளித்தான், நலமுடன் மீண்டும் வருக! பதிவினை தொடர்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்லா இருக்கிறீங்களா?
கன நாளாகச் செய்தியில்லாததால், டாக்டர் அக்காவிடம் விசாரித்தேன்.
நலமாக எழுதுங்கள்.
சிங்கப்பூர் போறீங்களா? மிக்க நன்று.

அனுராதா said...

வாங்க வவ்வால் மற்றும் யோகன் பாரிஸ்.சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன்.புது லேப்டாப் வாங்கித் தந்திருக்கிறான் என் மகன்.இனிப் பதிவுகள் தடையின்றித் தொடரும்.