Saturday, May 3, 2008

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

நேற்று மே 2ந் தேதி மருத்துவமனைக்குச் சென்றோம்.எக்ஸ்ரே,அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்,எம்.ஆர்.ஐ. பிரெய்ன் ஸ்கேன் ஆகியவைகள் எடுக்கப்பட்டன.அனைத்தையும் பரிசீலித்துவிட்டு,"உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை மிகவும் நன்றாக வேலை செய்திருக்கிறது.மூளையில் இப்போது 1.5x1.3 செ.மீ.அளவில் தென்படுகிற கட்டியானது ஏற்கனவே இருந்த புற்றுநோயின் இறந்துபோன செல்களாக (dead cells)இருக்கும்.எனவே அடுத்த ஆறு மாதம் வரை எந்த மருந்தோ சிகிச்சையோ தேவை இல்லை.எதற்கும் மாதம் ஒருமுறை வந்துவிட்டுப் போங்கள்.இடையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே வாருங்கள்.அப்படி பிரச்சனை எதுவும் நிச்சயமாக ஏற்படாது"என்று டாக்டர் சொன்னார்.
நல்ல ரிசல்ட் வந்திருக்கிறது என்று மனதார சந்தோசப்பட்டேன்.பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்தது.

29 comments:

Anonymous said...

nalla seithi ammma
Pavan

Anonymous said...

Nalla seithi amma
Pavan

வடுவூர் குமார் said...

எனக்கும் சந்தோஷமாக இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மகிழ்ச்சி ... மகிழ்ச்சி .. மேலும் நல் செய்திகள் வரட்டும்..

அனுராதா said...

வாங்க வடுவூர் குமார்.சென்னைக்கு வந்திருக்கீங்க போலிருக்கு.நல்லா இருக்கீங்களா?

வாங்க அனானி பவன்,கயல்விழி முத்துலட்சுமி.நன்றி

M.Rishan Shareef said...

நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க அனுராதாம்மா.
எல்லாம் நல்லபடியா நடக்கும்.

துளசி கோபால் said...

நல்ல சேதிக்கு நன்றி அனு.

Anonymous said...

very happy for you aunty.

may god bless you a healthy life from now on

regards,
lata

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல செய்தி, உடன் பகிர்ந்தமைக்கு நன்றி :)

K.R.அதியமான் said...

Great news. HAppy and relived to see this post.

With prayers,
Anbudan
Athiyaman

அனுராதா said...

வாங்க ரிஷன் செரீப்,துளசி கோபால்,லதா,மதுரையம்பதி, அதியமான் அனைவருக்கும் நன்றி.

Anonymous said...

Good News. Keep up your self confidence.


Kumar.

Anonymous said...

This is the best news. I really loved it. You will get better very soon. We all keep praying for you.

Ramya

CVR said...

ரொம்ப சந்தோஷமான செய்தி....

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! :-)

ILA (a) இளா said...

சந்தோசங்க. எல்லாம் ஆண்டவன் அருள்!

cheena (சீனா) said...

அன்பின் அனுராதா

மனம் மிக மகிழ்கிறது

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நல்ல செய்தி காதில் தேனக்கப் பாய்கிறது.

எல்லாம் வல்ல இறைவன் மேன்மேலும் நலத்தை அருள வேண்டுகிறேன்

அனுராதா said...

வாங்க குமார்,ரம்யா,சி.வி.ஆர்.,இளா,சீனா அனைவருக்கும் நன்றி.

Unknown said...

முழுதும் குணமடைந்து விட்டேன் என்ற பதிவும் விரைவில் வர ஏதிர் நோக்குகிறோம்.

கிரி said...

அம்மா! அடித்து தூள் பண்ணிட்டீங்க போங்க!!!

அடுத்ததா உங்க பதிவு இப்படி இருக்கணும் "அனைவரின் ஆதரவோடு முழு நலம் அடைந்தேன்" ..எப்படி :D சும்மா கில்லி மாதிரி அடித்து பட்டய கிளப்புவோம் ..நீங்கள் நலம் பெற இறைவனை மனதார வேண்டுகிறேன்.

அனுராதா said...

வாங்க சுல்தான்,கிரி.நன்றி.

Anonymous said...

Anbulla Amma,

Indha seidhi kettu neengal adaindhirukkak koodiya magizhchi-ai naanum adaindhen. Ungal vedhanaigalukkellam oru mutru pulliyagave idhu amaindhuvidattum.
Vaazhga valamudan..

Madurai citizen said...

Convey my thanks to the Doctors and I appreciate you for your tollerance and struggle against cancer. You will be recovered very soon. We all keep praying for you.
Jai Sai Ram

RAMYA said...

Amma,

We thank god to your current health. Convey my thanks to all Doctors. We keep praying for your speedy recovery.

Vijaya / KalaiChelvi / Suresh
Chennai
May 28th

Osai Chella said...

வாழ்த்துக்கள் தோழி! படிக்கவே மிகவும் மகிழ்வாக இருந்தது! ஊழையும் உப்பக்கம் காண்பவர் நீங்கள் என்றால் அது மிகையன்று! கண்(அ)வரையும் கேட்டதாகக் கூறவும்!

அனுராதா said...

வாங்க சுகந்தி,மதுரை சிடிஜன்,ரம்யா,ஓசை செல்லா.நன்றி.

கிரி said...

அம்மா எப்படி இருக்கிறீர்கள். இன்று உங்கள் நினைவு வந்தது.. நீண்ட நாட்களாக ஒரு பதிவும் வரலையே..என்ன செய்தி என்று கேட்டு போகலாம் என்று வந்தேன்..

உங்கள் கணவர் எப்படி இருக்கிறார்? கேட்டதாக கூறுங்கள்.

SurveySan said...

நல்ல செய்தி.
கொண்டாடவும்.

கிரி said...

அம்மா இன்று செய்தியில், நேற்று அடையாரில் நடைபெற்ற புற்று நோய் கருத்தரங்கம் ல் பேசிய பலரின் பேச்சை கேட்டேன்.. இது 100% குணப்படுத்த கூடிய நோய் தான், அதனால் யாரும் கவலை பட தேவை இல்லை என்ற கூறியதை கேட்ட போது உங்கள் நினைவு தான் வந்தது. நீங்கள் பூரண குணம் அடைந்து பதிவு எழுதும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

அனுராதா said...

வாங்க சர்வேசன்.நல்லாச் சொன்னீங்க.கொண்டாடவா!!!
வாங்க கிரி.நன்றி